சின்னாளபட்டி,செப்.30- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டு ஊராட்சி ஒன்றியம் ப.விராலிப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டவும் பண்ணைப் பட்டி சமத்துவ மயானத்தில் காத்தி ருப்போர் கூடம்,மயான கூடம், சுற்றுச் சுவர்,சிமெண்ட் சாலை ஆகியவற்றின் கட்டுமானப்பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பர மேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திட்டப் பணிகளை பொக்லைன் மூலம் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி,ஊர் முக்கிய பிரமுகர்கள் வரதராஜன், நரசிம்மன்,ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.