districts

img

வன்னிவேலம்பட்டியில் புதிய ஊராட்சி கட்டடம் அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்

மதுரை, மார்ச் 13- மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன் றிய அலுவலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திங்களன்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்ததாவது:- கூட்டுறவுத்துறையின் மூலம் நியாய விலைக்கடை களில் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு அரசின்  மூலம் வெளியிடப்பட்டு, இப் பணியிடத்திற்கு விண்ணப் பித்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு  செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதற்கான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சி யர் எஸ்.அனீஷ் சேகர் உள்  ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து, தே.கல்லுப்  பட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட வன்னிவேலம்பட்டி ஊராட்சி மன்ற புதிய கட்ட டத்தை திறந்து வைத்த தோடு. வன்னிவேலம்பட்டி ஊராட்சி நியாய விலைக் கடையையும், புல்கட்டை ஊரணியையும் ஆய்வு செய்தார்.  திருவில்லிபுத்தூர் பின்னர், திருவில்லி புத்தூரில் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “அண்ணா  கிராம மறுமலர்ச்சித் திட் டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1400 கோடி அளவுக்கு முதல்  வர் நிதி ஒதுக்கீடு செய்துள்  ளார். முதல்வரின் கிராமப்புற  சாலை மேம்பாட்டு திட்டத் திற்கு ரூ.4 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என்றார். தொடர்ந்து மல்லி ஊராட்சி பண்டிதன்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பரா மரிக்கப்பட்டு வரும் பூங்கா வைப் பார்வையிட்ட அமைச்  சர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட பணி யின் கீழ் செயல்பட்டு வரும்  நர்சரி கார்டனையும் பார்வை யிட்டார்.

இங்கு தென்னை மா பலா வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான கன்று கள் வளர்க்கப்பட்டு இலவச மாக மக்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக ஊராட்சித் தலை வர் ராஜ்குமார் பாராட்டி கௌரவித்தார் அமைச்சர். ஆய்வின் போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலர் செந்தட்டி உள்ளிட்டோர் உடனிருந்த னர். விழுப்பனூர் ஊராட் சிக்குட்பட்ட பகுதியிலுள்ள கல்லூரி அருகே 5 லட்சம்  மதிப்பீட்டில் பூங்கா அமைக்  கப்பட்டு தென்னை மா பலா  வாழை உள்ளிட்ட பல வகை யான பழ மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த பூங்கா வையும் அமைச்சர் பார்வை யிட்டார். இந்தப் பணியை சிறப்பாக செயல்படுத்தி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வன் பாராட்டி கௌரவித்தார் அமைச்சர். ஆய்வின் போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி செயலர் முருகன் உள்ளிட்டோர் உட னிருந்தனர். திருவண்ணாமலை ஊராட்சி என். சண்முகசுந்தர புரம் கிராமத்தில் சாலை அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். அமைச்சருடன் திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஆணையாளர்  சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் மீனா, துணைத் தலைவர் முத்து மாரி ஊராட்சி செயலர் முனி யாண்டி ஆகியோர் வந்தி ருந்தனர்.