இராமநாதபுரம்,பிப்.25- விவசாயிகள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள திட்டமான விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை செயல் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் மாவட்ட விவ சாய பெருமக்கள் நன்றியை தெரிவித்துள் ளனர். எரிசக்தி துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசா யிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கு டன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்பு கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறை யாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெ டுக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 23.09.2021 அன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்ட மானது ரூ.3025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டு 395 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 242 விவசாயி களுக்கு மின் இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் மின்னகம் மூலம் இதுவரை 3615 புகார்கள் பெறப்பட்டு அதில் 3604 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, 11 மனுக்கள் பரிசீலனை யில் உள்ளன. இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அதிக மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் கொண்ட பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் 173 மின்மாற்றிகள் இது நாள் வரை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டதின் கீழ் பயனடைந்த கீழக்கரை வட்டம் பருத்திக்காட்டு வலசை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து தெரிவிக்கையில், கடந்த 2010-2011 காலகட்டங்களில் இலவச மின்சா ரத்திற்காக பதிவு செய்திருந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தேன் எந்த பயனும் அடையவில்லை. ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்திருந்தார்கள். இத்திட்டத்தின் கீழ் எனக்கு மின் இணைப்புக்கான ஆணை வழங்கினார்கள். மின் பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ஆதரவுடன் 360012701 இந்த எண்ணில் மின் இணைப்பு எனக்கு கிடைத்ததுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்து வருகிறேன்.மிகவும் பயனுள்ள இத்திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வரு க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ.வினோத் ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.