districts

img

விருதுநகர் ஆட்சியரகத்தில் ரூ.244.20 லட்சத்தில் புதிய கட்டிடப் பணி

விருதுநகர், ஜூன் 18- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.244.20 லட்சம் மதிப்பில்  மாவட்ட நகர் மற்  றும் ஊரமைப்பு அலுவலக  புதிய கட்டட  பணிகளை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலை மையேற்றார்.   விருதுநகர் சட்டப்பேரவை  உறுப்பினர்   சீனிவாசன்  முன்னிலை வகித் தார். வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் மற்றும்   நிதி,  மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர்  தங் கம்தென்னரசு  ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர்  சிவக்குமார், செயற்பொறியாளர்  செல்வ ராஜன் ஆகியோர்  உட்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சிவகாசியில் நகராட்சி மற் றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்  பீட்டில் மாநகராட்சி அலுவல கம் கட்டும் பணியை அமைச்  சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். பின்பு, ஆணைக்குட்டம் மற்றும் பள்ளபட்டி கிரா மங்களில் ரூ.81 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட  புதிய  கால்நடை மருந்தக கட்டி டங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.