districts

img

கோவில்பட்டி அருகே கரிசல் எழுத்தாளர் கி.ரா. பயின்ற பள்ளி திறப்பு

தூத்துக்குடி, அக். 12 கரிசல் எழுத்தாளர் கி. ரா. வின் சொந்த ஊரான கோவில் பட்டி அருகே இடைசெவ லில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அவர் பயின்ற பள்ளி திறந்து வைக் கப்பட்டது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப் படும் கி.ராஜ நாராயணன் கடந்த 2021ஆம் மே 18ல் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடை செவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் படித்த பள்ளியான இடை செவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப் பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படை யில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் பள்ளி யில் பழமை மாறாமல் புதுப் பிக்கும் பணி நடைபெற்றது. இதில், பள்ளியின் முகப்பு சுவர், உட்பகுதியில் உள்ள சுவர்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. இப் பணிகள் நிறைவு அடைந்த தை தொடர்ந்து, பள்ளியை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து இடை செவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கூடுதல் ஆட்சியர் சரவணன் கல் வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளியில் குத்து விளக்கேற்றி அங்குள்ள மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், முதன்மை கல்வி அலுவலர் பால தண் டாயுதபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனி வாசன், சுப்புலட்சுமி, எழுத்தாளர் கி.ரா. வின் மகன் பிரபி, இடைசெவல் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.