இராமநாதபுரம், ஜன.28- வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பொய்யாததால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி இராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர் கீஸை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தினால் பாச னத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வைகை பாசன கண்மாய் தவிர மற்ற அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து மிகக் குறைவான காரணத்தினால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகி யுள்ளனர். மழையை நம்பியே சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் கருகி இராமநாத புரம் மாவட்ட விவசாயிகள் பெரும் நெருக்க டிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த ஆண்டினை வறட்சி ஆண் டாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட விவ சாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உரிய வறட்சி நிவாரண தொகை இழப்பீட்டினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளையாத நிலையில் காப் பீட்டுத் தொகை வருவதற்கு மிகுந்த கால தாமதம் ஆகுவதாகவும் பயிர்க்காப்பீடு செயத விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பயிர் காப்பீட்டு தொகையை தாமதம் இன்றி விரைவாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.