districts

திருச்சி முக்கிய செய்திகள்

தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் முன்னணி மாநில மாநாடு

திருச்சிராப்பள்ளி, பிப்.27- திருச்சியில் தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்  முன்னணி அமைப்பின் தமிழ் மாநில மாநாடு மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொருள் ஆய்வு குழு அறிமுக உரை குறித்து தலைமை  ஆலோசகர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். வரவேற்பு குழு தலைவர் ராஜேந்தி ரன் வரவேற்றார். மாநில நிதி செயலாளர் வீரமணி நன்றி  கூறினார். நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், விஷ்ணு தேவன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஓய்வூதியர்கள் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

ஏழைக்குடும்பங்களுக்கு மின்வசதி செய்து தர அதிகாரிகள் உறுதி 

தஞ்சாவூர், பிப்.27-  மணக்காடு ஊராட்சி நெல்லடிக்காடு, மரக்காவலசை, கழனிவாசல் ஊராட்சி சோழகனார்வயல் கிராமத்தில்  வசிக்கும், ஏழை குடும்பங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி  தர வேண்டும். பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக மேல்  தளத்தில் செயல்படும் சமூகநலத்துறை அலுவலகத்தை பொதுமக்களின் வசதிக்காக கீழ்தளத்திற்கு கொண்டு வர வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடம் நெல்  மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கெடுபிடி வசூல் செய்வதை கண்  டித்தும், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் தவறான  போக்கை கண்டித்தும் பிப்ரவரி 27 (திங்கள்கிழமை) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கடைவீதியில் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து ரெட்டவயல் கடைவீதியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு  உறுப்பினர் எம்.இந்துமதி, மூத்த தோழர் வீ.கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ். வேலுச்சாமி, நாகேந்திரன், சேகர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பெருமக ளூர் வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை மற்றும் காவல் துறையினர், சிபிஎம் தலைவர்கள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மின் இணைப்பு வழங்க உரிய நட வடிக்கை எடுப்பதாகவும் மற்ற பிரச்சனைகள் உடனடி யாக தீர்க்கப்படும் என உறுதி அளித்தனர். இதையேற்று சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கை விடப்பட்டது. 

செவித்திறன்  மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கல்

திருவாரூர், பிப்.27-  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா  மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிர மிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 184 மனுக் களை மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் அளித்தனர்.  பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களி டம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்  களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள் ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன்  வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்  திறனாளிகளுக்கு ரூ.67,500 மதிப்பி லான ஸ்மார்ட் செல்போன்களை பய னாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

100 நாள் வேலைக்கு தனி அடையாள அட்டை: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

கும்பகோணம், பிப்.27- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க கும்பகோணம் ஒன்றிய முதல் சிறப்பு பேரவை திருவலஞ்சுழி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. ஏ.காமாட்சி தலைமை வகித்தார். கே. மகேஸ்வரி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில  பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி நிறைவுரை யாற்றினார். தாமோதரன் நன்றி கூறினார். பேரவையில், ஒன்றிய தலைவராக காமாட்சி,  துணைத் தலைவர்களாக நிர்மலா, அறிவழகன், செயலாளராக தாமோதரன், இணைச் செயலா ளர்களாக கருணாநிதி, தர்மலிங்கம், பொருளாளராக மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை 2023-24 ஆண்டுக்கான திட்டத்தை உறுதிப்படுத்தி அவர்களுக்கான தனி நீல நிற அடையாள அட்டை  வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த முழு தொகை யும் வழங்க வேண்டும். மருத்துவமனை மற்றும் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் லிப்ட் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

நகைச் சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.27-  நகைச் சீட்டில் பணம் கட்டி, அதை மோசடி செய்த  தனியார் நகைக் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட வர்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தஞ்சையில் திங்கட்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் அசோகன் நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்த 50க்கும் அதிகமானோர் கூடுதல்  ஆட்சியர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்துள்ளனர்.  அதில், ‘‘அசோகன் நகைக்கடையால் பாதிக்கப்  பட்ட நாங்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களின் பணம், நகை திரும்ப கிடைக்க செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மகனிடம் இருந்து சொத்தை  மீட்டுத்தர தாயார் கோரிக்கை 

தஞ்சாவூர், பிப்.27- தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த  மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள் (84) என்பவர் அளித்  துள்ள மனுவில், ‘‘நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளி நாட்டில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தேன். தற்போது வயது முதிர்வால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை.  இந்த நிலையில் எனது மகன் முருகானந்தம் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார். மேலும் நான் அணிந்திருந்த நகை களை விற்று அவருக்கு நான் வீடு கட்டி கொடுத்தேன். ஆனால் என்னை  சரிவர கவனிப்பதில்லை. மகனுடன் சேர்ந்து மருமகளும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். வயதான காலத்தில் என்ன செய்வது என்று  தெரியவில்லை. என் மகன் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்ட  சொத்துக்களை என்னிடம் மீட்டு கொடுக்க வேண்டும்’’ எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கர  வாகனம்  வழங்குக! 

மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, பிப்.27- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் 3-ஆவது திருச்சி புற நகர் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை புள்ளம்பாடியில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு சுப்பிரமணியன், சித்ரா, சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்த னர். புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் தன லட்சுமி சங்க கொடியை ஏற்றினார். லால்குடி ஒன்றியச் செயலாளர் சமுத்திரவள்ளி வர வேற்றார். ஒன்றிய பொருளாளர் நாகஜோதி நன்றி கூறினார். மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி, மாநில துணைத் தலைவர் ஜீவா, மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்டச் செய லாளர் ரவி, விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ரஜினி காந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மாநாட்டில், மாவட்டத் தலைவராக ஆர். ரவி, செயலாளராக டி.ரஜினிகாந்த், பொருளா ளராக ஜெ.சித்ரா துணை தலைவர்களாக ஆர்.  சுப்பிரமணியன், ஆர்.சாமிக்கண்ணு, ஏ. ராஜேஷ், துணை செயலாளர்களாக எம்.ஞானசேகர், ஜி.சமுத்திரவள்ளி, கோபிநாத் உள்ளிட்ட 29 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது  கூட்டத்தில், அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் 100 நாள் வேலையை முழு சம்பளத்துடன் தொடர்ந்து வழங்க வேண்டும்,  கடும் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு ரூ5000-ம் ஊனமுற்ற அனைவ ருக்கும் ரூ.3000 -ம் வழங்க வேண்டும். மாற்  றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசு  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கான மருத்துவச்சான்று வழங்க  வேண்டும், 50 சதவீதம் பாதிப்பு உள்ள மாற்  றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட் டார் பொருத்திய பெட்ரோல் வண்டி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டுமனை, இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.