districts

img

வாரிய குடியிருப்பில் இலவசமாக வீடு வழங்குக!

தேனி ,மார்ச் 11- தேனி அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு தங்களால் பங்கு தொகை செலுத்த முடியாது.இலவசமாக தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நரி குறவர் இன மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேனி அருகே வள்ளி நகர், தென்றல் நகர் ஆகிய பகுதி களில் நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அவர்க ளுக்கு  2017 ஆம் ஆண்டில் அம்மாபட்டி அருகே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது .பின்னர் அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 175  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. பயனாளிகள் ரூ.2 லட்சம் வரை பங்குத்தொகை செலுத்தி னால் மட்டுமே வீடுகள் ஒதுக்க முடியும் என குடிசை மாற்று வாரி யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தங்களால் ரூ. 2 லட்சம் கொடுக்க முடியாது ,ஏற்கனவே கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அரசால் இலவச மாக வழங்கப்பட்டது .எனவே பயனாளிகளிடம் வீடுகளை ஒதுக்க வேண்டும் என வலி யுறுத்தி சமுதாய தலைவர் சங்கர் தலைமையில் வெள்ளிக் கிழமை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .பெரியகுளம் வட்டாட்சியர் ராணி மற்றும்  காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அரசின் கவ னத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.