நாகர்கோவில், மார்ச்.12- நாகர்கோவில் மாநகராட்சி யில் 40 ஆண்டுகாலமாக தேங்கி கிடக்கும் குப்பைகளை விஞ்ஞான ரீதியில் அகற்றப்ப டும் என மேயர் ரெ.மகேஷ் தெரி வித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் வலம்புரிவளை குப்பை கிடங்கில் ரூ.10 கோடி மதிப்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை வெள்ளியன்று (மார்ச் 11) ஆய்வு செய்த மாநகர மேயர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதி களில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சிக்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட இருளப்பபுரம் பகுதியில் அமைந்துள்ள வலம்புரிவிளை உரக் கிடங்கு 40 ஆண்டுகாலமாக தேங்கி கிடந்த குப்பைகளை விஞ்ஞான ரீதியில் அகற்றுவதற்கு ரூ.10 கோடி மதிப்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்சமயம் உபயோகத்தில் இரண்டு இயந்தி ரங்கள் மட்டுமே உள்ள நிலை யில், கூடுதலாக இரண்டு இயந்தி ரங்கள் அமைத்து ஓராண்டு காலத் திற்குள் இப்பணிகளை விரைந்து முடித்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே வளாகத்திலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டதில், 85 சத விகிதம் பணிகள் முடிவடைந்துள் ளன. எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்திட ஒப்பந்ததா ரர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மேற் கொள்ளப்பட்டதில், தற்சமயம் உபயோகத்திலுள்ள இரண்டு இயந்திரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக இரண்டு இயந்திரங்கள் அமைத்து தந்து ஓராண்டு காலத்திற்குள் இப்பணி களை விரைந்து முடித்திட வும், மேலும், அதே வளாகத்தி லுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தினை ஆய்வு மேற்கொண்ட தில், 85 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பணிகளை யும் விரைந்து முடித்திட ஒப்பந்த தாரர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக் கான புதிய அலுவலக கட்டிடத் தினை ஆய்வு மேற்கொண்டதில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் விதியின் கீழ் (Operation and Maintenance) ரூ.5 கோடியும், மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதியின் கீழ் (Development fund and General Fund ) ரூ.5.5 கோடி மதிப்பில் என மொத்தம் ரூ.10.5 கோடி மதிப்பில் தரைத்தளம் உள்ளிட்ட நான்கு அடுக்குமாடி கட்டிட பணியினை பார்வை யிட்டு, மூன்று மாதத்திற்குள் இப்பணிகளை விரைந்து முடிக்கப்பட்டு அலுவலகம் விரை வில் செயல்பட ஒப்பந்ததாரர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என மேயர் ரெ.மகேஷ் தெரி வித்தார். நடைபெற்ற ஆய்வில், மாநக ராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறி யாளர் பாலசுப்பிரமணியன், மாநக ராட்சி நல அலுவலர் விஜயசந்தி ரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.