districts

img

நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை, செப்.19-  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாரப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து பெண் களை தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒற்றுமையாக உள்ள இருதரப்பினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசிய நாகமலை புதுக்கோட்டை ஆய்வா ளர் சிவகுமார் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவம் அறிந்து விரைந்து வந்த சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், கொடி மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா தேவி திருக்குமரன் ஆகியோர் பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை யடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.