மதுரை ஆழ்வார்புரம் 1 ஆவது தெரு பகுதியில் ஞாயிறன்று இரவு வீட்டுச்சுவர் இடிந்து மயிலம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார் .இச் சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் டி. குமரவேல், பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, கிளைச் செயலாளர் நமச்சிவாயம் ஆகியோர் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.