districts

img

அரசாணை 152-ஐ ரத்து செய்யக்கோரி நகராட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஜன.12-  நகராட்சி தொழிலாளர்களை கொத்தடிமை யாக்கும் அரசாணை எண் 152 ஐ தமிழக அரசு ரத்து  செய்ய வேண்டும். 1996ல் உருவாக்கப்பட்ட பணி விதி களை திருத்தம் செய்யக் கூடாது. ஓய்வு பெற்ற பின்பும்  விரிவாக்கத்திற்கு ஏற்பவும் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.  நகராட்சியில் உள்ள பேட்டரி வண்டிகளை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு நக ராட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் எஸ். மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம். திருமலை, மாவட்டச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன், சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வீர சதானந்தம்  சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஏ.மரிய டேவிட் ஆகியோர் பேசினர் . கிளைச் செய லாளர் காளியப்பன், முனியாண்டி உட்பட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.