districts

img

பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 15- பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் நம் பியூர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து  பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். பேரூராட்சிகளில் உள்ள காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, தூய்மை பணிகள் உள்ளிட்டவற்றை தனி யார் வசம் ஒப்படைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் எனப்பல கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் மகா லிங்கம் தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பெருமாள் வாழ்த்தி பேசினார்.