விருதுநகர், செப்.,8- விருதுநகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா நடை பெற்றது. விருதுநகர் நிறைவாழ்வு நகரில் தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நடை பெற்றது. கட்டிடக்குழுத் தலைவர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். ராஜேஸ்வரி குழந்தைவேல் பாண்டியன், மாவட்டத் தலைவர் ஐ.மாட சாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மாரியப்பன், துளிகள் அமைப்பின் மாவட்டத் தலைவர் பாண்டி யம்மாள், மாவட்டப் பொரு ளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம். சுந்தரராமன் வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாநிலச் செயலா ளர் எஸ்.பரமசிவம் பேசி னார். ஆராய்ச்சி மையத் தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட ஆலோசகர் பி.எஸ். போஸ்பாண்டியன் விளக்க வுரையாற்றினார். மாவட்ட வளர்ச்சி மேலா ளர் (நபார்டு) இராஜசுரேஷ்வ ன், அணு விஞ்ஞாணி ஜெ. டேனியல் செல்லப்பா, வரு மான வரித்துறை அதிகாரி (ஓய்வு)சரவணக்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் இராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் ஏ.தமிழரசி நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர்க ளாக மாநில முன்னாள் தலை வர் பி.கே.சசிதரன், மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், மாநிலப் பொதுச் செயலா ளர் எஸ்.சுப்பிரமணி, மாநிலப் பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், கல்வியாளர் ஆர்.எஸ்.பாலசுந்தரம், மாநில முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.அமலராஜன் ஆகியோர் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.