திருவில்லிபுத்தூர், மார்ச் 21- விருதுநகர் மாவட்டம் வத்தி ராயிருப்பு அருகே வருவாய் நிலங் களில் மாடுகளை மேய்க்கச் சென்ற ஆறு பேரை கைது செய்த வனத் துறையைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் வனத்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரை சுற்றியுள்ள மலை அடிவார கிராமப்பகுதி களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிடை மாடுகள் வளர்க்கப் பட்டு வருகிறது. கிடை மாடுகளை மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் தான் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யை யுனெஸ்கோ அமைப்பு பாது காக்கப்பட்ட பகுதி என அறிவித்து உள்ளதாலும் இப்பகுதியில் புலி கள் சரணாலயம் அமைந்துள்ள தால் மேய்ச்சலுக்கு கிடை மாடு களை வனப்பகுதிக்குள் அழைத் துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத னால் மலை மாடுகள் மேய்ப்ப வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இவர்கள் தமிழ்நாடு விவசாய சங்கம் தலைமையில் திருவில்லி புத்தூரில் உள்ள துணை இயக்கு னர் அலுவலகம் முன்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வனத் துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். மலை மாடுகளை மேய்ப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
இந்த நிலையில் வத்திராயி ருப்பு அருகே உள்ள பிளவக்கல் வருவாய் நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த மாடுகளில் ஒரு சில மாடுகள் வரு வாய் நிலத்தைத் தாண்டி மலை யடிவாரத்தை ஒட்டி மேய்ந்தது இதனைக் கண்ட வனத்துறை யினர் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்த்ததாக பொய் யான காரணங்களை கூறி அலி யார், லிங்கேஸ்வரன், அம்மாசி, அங்கப்பன், பாண்டி, சுப்பையா ஆகிய ஆறுபேரை எஸ்.கொடிக் குளம் வனத்துறையினர் கைது செய்து வனத்துறை அலுவல கத்தில் வைத்திருந்தனர். இதை யறிந்த உறவினர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்தவர்களை விடு விக்கக் கோரி எஸ்.கொடிக்குளம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த திமுக செயலாளர் கருணை ஈஸ்வ ரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெயக்குமார், ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அதி காரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றரை லட்சம் அபராதம் விதிப்பதாக அதிகாரிகள் கூறினர் ஆனால் நிர்வாகிகள் அபராதம் விதிக் கக்கூடாது மாடுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர் இதற்கு அதிகாரிகள் சம்மதிக்க வில்லை வழக்குப் போடுங்கள் சந்தித்துக் கொள்கிறோம் எனக் கூறினர். தகவலறிந்த வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர்.ராமச்சந்திரன் தென் காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார் உள்ளிட்டோர் வனத் துறை அதிகாரியிடம் பேசியும் அவர்களிடம் அதிகாரிகள் பொய் யான தகவலை கூறி சமாதானம் செய்ய முயன்றனர். கடைசியில் அதிகாரிகள் ரூ. 25000 அபராதம் கட்ட வேண்டும். அபராதத் தொகைக்கு உரிய ரசீது வழங்கு கிறோம் என்றும் கூறினார் என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்டு மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.