வேளச்சேரி, டிச.1- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் அதிவேகத்தில் பயணம் செய்து விபத்துக் களில் சிக்குவது அதி கரித்து வருகிறது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிசென்று அதனை செல்போனில் படம்பிடித்த மாணவர்கள் 2 பேர் விபத் தில் பலியாகினர். தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்(வயது19). தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 மாணவர் ஹரியுடன்(17) மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்கள் தர மணி 100 அடி சாலையில் மோட்டார் சைக்கிளை 114 கிலொ மீட்டர் வேகம் வரை ஓட்டிச் சென்றனர். இதனை பின்னால் அமர்ந்து இருந்த ஹரி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார். தரமணி சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று திரும்ப முயன்றது. இதனை எதிர்பார்க்காமல் வந்த பிரவீன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார். அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கி ளோடு பிரவீனும், ஹரியும் கீழே விழுந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராயப் பேட்டை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். வியாழன்று காலை திருமங்கலத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் ஏஞ்சலின் (வயது26) உயிரி ழந்தார்