districts

img

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கம்

மதுரை, ஏப்.6-  வாழ்வாதாரக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சாலைப்பணி யாளர்களின் 41 மாத கால பணிநீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்த வேண்டும்.  சாலை பணியா ளர்களை கேங் கூலி என்று அழைக் கப்படுவதை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களை தமிழில் சாலைப்பணியாளர் என்றும் ஆங்கி லத்தில் (Road employees) என்றும்  அழைக்க வேண்டும் . பழைய ஓய்வூ திய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம்   சார்பில் முதல்வருக்கு  தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.  மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தில் மாவட்டத் தலை வர்   த.மனோகரன் தலைமையில் நடை பெற்றது  மாநிலப்பொருளாளர் இரா. தமிழ் மாவட்டச் செயலாளர்  சோலை யப்பன்,  வட்டக்கிளை நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா  உள்பட  பலர் தபால் அனுப்பினர்.  

இராஜபாளையம் 


இராஜபாளையம் தபால் நிலை யத்தில்  மாவட்ட துணைத்தலைவர் கோபால் தலைமையில் நடை பெற்றது.  மாவட்ட செயலாளர் முரு கன் செந்தில்வேல், பொருளாளர் திருப்  பதி ராஜ், இணை செயலாளர் தேவ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்த இயக்கங்களில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.