districts

img

மூட்டா தலைவர் பேரா. ஆவுடையம்மாள் காலமானார்

சிவகங்கை, செப்.1-  சிவகங்கை மாவட்டம் காரைக்  குடியில் மூட்டா தலைவர் பேராசிரி யர் ஆவுடையம்மாள் ஆகஸ்ட் 30 அன்று காலமானார்.  இவர் காரைக்குடி வழக்கறி ஞர் கமல்தயாளனின் தாயார்  ஆவார். பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளராக பணியாற்றினார். பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் அமைப்பான மூட்டாவின் தலைவராகவும் செயல்பட்டார்.   இறுதிநிகழ்வு காரைக்குடியில் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் முத்துராமலிங்க பூபதி,கருப்புசாமி, மோகன், காரைக்குடி தாலூகா செயலாளர் அழகர்சாமி, மாவட்டக்  குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஷாஜிசெல்லான், மாவட்ட செயலாளர் மதி,பார் கவுன்சில் உறுப்பினர் அசோக் மற்றும் சிஐடியு தலைவர்கள் மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.