தேனி, டிச.17- சிறுபான்மையின மாணவர் களுக்கு வழங்கி வரும் கல்வி உத வித்தொகையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரை, போடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த பிரி மெட்ரிக் உத வித்தொகை நிறுத்தியும் ,அப்துல் கலாம் ஆசாத் நினைவாக சிறு பான்மையின ஆராய்ச்சி மாணவர் களுக்கு வழங்கி வந்த உதவித் தொகையை நிறுத்தி பாதகச் செய லில் ஈடுபட்ட மோடி அரசை கண்டித் தும், மீண்டும் உதவித்தொகை வழங்க வலியுறுத்தியும் ,சட்டவிரோ தமாக பல ஆண்டுகளாக சிறை யில் உள்ள சிறுபான்மை மக்களை விடுதலை செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி பாரிஸ் டர் ஜார்ஜ் ஜோசப்பின் பிறந்த நாளில் அரசு மரியாதை செலுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடி கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் எஸ்.எஸ்.எஸ்.செளக்கத் அலி தலைமை வகித்தார். மாவட்ட உதவி தலைவர் அக்பர் துவக்கி வைத்து பேசினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச.ரகுநாகநாதன், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முஸாக் மந்திரி ,மதிமுக நகர் செய லாளர் ஆரோ செல்வன் ,மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வ ரன், தாலுகா செயலாளர் எஸ்.செல் வம், சிபிஐ நகரச் செயலாளர் சத்தி யராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
மூத்த தலைவர் கே.ராஜப்பன் நிறைவு செய்து பேசினார். மதுரை மதுரை மகபூப் பாளையம் ஜின்னா திடலில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். இ. ஸ்டீபன் தலைமையிலும், ஷப்னம் முன்னி லையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் துவக்கி வைத்து பேசினார் . மாவட்ட தலைவர் கே. அலாவுதீன், நிர்வாகி கள் என். கணேசமூர்த்தி, எம். ஜான்சன், பல்சமய உரையாடல் குழு செயலாளர் பெனடிக் பர்ண பாஸ், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.லாரன்ஸ், தமுமுக - மமக மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. செல்வ ராஜ், மாணவர் சங்க மாவட்ட தலை வர் சி. டேவிட் ராஜதுரை ஆகி யோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவுரையாற்றினார். வட்டச் செயலாளர் பீ. சலீம் நன்றி கூறினார். ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதிக்கு உட்பட்ட முஸ்லிம் மக்க ளுக்கு ஜீவா நகர் பகுதியில் அரசு புறபோக்கு இடத்தில் அடக்கஸ் தலம் அமைத்து கொடுக்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது.