மதுரை, ஜூலை 16- மன்னர்களின் ஆட்சியில் வரைமுறை இல்லாமல் வரி மேல் வரி விதித்து மக்களை வதைத்த கொடுமையான வரலாறு உண்டு. அப்படிப்பட்ட ஆட்சி மறுபடியும் வந்துவிட்டதோ என்று நினைக்கும் வகையில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் ஆட்சி உள்ளது. எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந் தும் திருப்தி அடையாத ஒன்றிய பாஜக அரசு, அவர்கள் உண்ணும் உணவை கூட விட்டு வைக்காமல் அதற்கும் வரி விதித்துள்ளது. தென் மாநிலங்களான தமிழ கம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி என்பது மக்களின் முக்கிய உண வுப்பொருளாகும். அரிசிக்கு 5 சத வீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திருப்பூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகம் முழு வதும் 4500-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அரிசி உற்பத்தியில் ஈடு பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட் டம் காங்கேயத்திற்கு அடுத்தபடி யாக மதுரை மாவட்டத்தில் 120 அரிசி ஆலைகள் உள்ளன. இதில் 80 சதவீதம் ஆலைகள் இயங்கி வருகின்றது. காங்கேயத்தில் 125 அரிசி ஆலைகள் இயங்கி வரு கின்றன. ஒன்றிய அரசு தற்போது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந் தது. தற்போது பண்டல் செய்யப் பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் கிலோ விற்கு ரூ.3 வரை அரிசி விலை உய ரும் அபாயம் உள்ளது. இதனால் மதுரை, திருவில்லிபுத்தூரில் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்தும் உடனே திரும்பப்பெறக்கோரியும் ஜூலை 16 சனிக்கிழமையன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
அரிசி உற்பத்தியை கார்ப்பரேட்மயமாக்கவே வரி விதிப்பு
இதுகுறித்து ஜிபிஎஸ் அரிசி ஆலை உரிமையா ளர் பி.செல்வ குமார் கூறுகை யில், ‘‘தமிழக மக்க ளின் உணவுப் பொருளில் அரிசி தவிர்க்க முடியாத ஒன்றாகும். மூன்று பேர் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசி பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு உணவுக்காக 15 ஆயிரம் டன் அரிசி பயன்படுத்தப் படுகிறது. அதேபோல் தினசரி கொள்முதல் என்பது 25 ஆயிரம் டன்னாக உள்ளது. அரிசிக்கு 5 சத வீதம் ஜிஎஸ்டி வரி என்பது தங்கத் திற்கு விதிக்கும் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விட அதிகம்தான். இந்த வரி விதிப்பு சாமானிய மக்களை யும் பாதிக்கும் அளவில் உள்ளது. பருப்புக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது என்றால் அதிகபட்சம் ஒரு குடும்பத்தில் தினசரி 100 கிராம் பருப்பு செலவிடப்படும். அது பெரி தாக அவர்களுக்கு தெரியாது. தற் போது ஒரு கிலோ அரிசி 45 ரூபா யாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் 50 ரூபாயாக விலை உய ரும். அத்தியாவசிய தேவைகளுக் கான உணவுப்பொருட்கள் மீது வரி விதிப்பு செய்யக்கூடாது. ஆனால் தற்போதுள்ள அரசு தொடர்ந்து உணவுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கிறது.
ஒரு ஆட்சியை நிர்ணயம் செய் யக் கூடியது அரிசி விலைதான். கடந்த காலங்களில் தமிழகத்தில் அரிசி விலை உயர்வு கிடையாது. திமுக ஆட்சி காலத்தில் அரிசி விலை உயர்வு என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதுமில்லை; செய்ததும் இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அரிசிக்கு வரியை உயர்த்திய போது மிகப்பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து வரி உயர்வை 40 நாட்களில் திரும் பப்பெற்றனர். ஒன்றிய அரசு வரி விதிப்பு செய்தாலும் மாநில அரசு வரி விதிப்பை மக்கள் மீது திணிக்க மாட்டோம் என்று முடிவு எடுப்ப தற்கு உரிமை உள்ளது. கடந்த முறை ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது அது பிராண்ட் அரிசிகளுக்கு மட்டுமே விதிக்கப் பட்டது. ஆனால் தற்போது அறி வித்துள்ள அறிவிப்பு அனைத்து வகையான அரிசிக்கு என்பது ஏற் றுக்கொள்ள முடியாது.
உற்பத்தி யாளர்கள் வரியை மொத்தமாக வாங்கும் வியாபாரிகளிடம் பெற் றுக் கொள்வார்கள். அந்த வியா பாரிகள் அந்த வரியை மக்களிடம் தான் வசூல் செய்ய வேண்டிய சூழ் நிலை ஏற்படும். விவசாயம் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. ஏனென்றால் நெல் கொள்முதல் செய்பவர்கள் தற்போ துள்ள வரி விதிப்பிற்கு ஏற்றாற் போல் கொள்முதல் செய்வது கிடை யாது. ஏற்கனவே விவசாயிகள் இடு பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கள் நிர்ணயிக்கும் விலையில் கொள்முதல் செய்பவர்கள் வாங்கு வதில்லை. கொள்முதல் செய்ப வர்கள் நிர்ணயிக்கும் விலைக்குத் தான் விவசாயிகள் அரிசியை கொடுக்கிறார்கள். அரிசி உற்பத்தி கார்ப்பரேட்மயமாகும் சூழ்நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது. திருவில்லிபுத்தூரில் நெல் அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை அதிபர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்- கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 150 கடைகள் மற்றும் 10 அரிசி ஆலை கள் முழுமையாக அடைக்கப்பட் டன. வெங்காயம்,அரிசி விலை உயர்வு ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது என்பதே வர லாறு. ஒன்றிய பாஜக ஆட்சியாளர் கள் அதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்.இனியும் இதுபோல் தொடர்ந்தால் மக்கள் ஒன்றிய ஆட்சியை தூக்கியெறி வார்கள் என்று மக்களும் அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர். (ந.நி)