விருதுநகர், ஏப்.19- கிராமப்புற ஏழை, எளிய மக்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழ்ந்து வரும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பாஜக அரசு தொட ர்ந்து நிதியை குறைத்து அநீதியை இழைத்து வருகிறது என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரி வித்தார். விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிசேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, ஒ. கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம், ஒண்டிப் புலிநாயக்கனூர் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடும் வெயிலையும் பொருட்படுத்தா மல் ஏழை, எளிய மக்கள் 100 நாள் வேலை யில் பணியாற்றி வருவதை பார்க்க முடி கிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசானது, கிரா மப்புற ஏழை, எளிய மக்களின் ஒரே வாழ்வா தாரமாக திகழ்ந்து வரும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தொடர்ந்து நிதியை குறைத்து அநீதியை இழைத்து வருகிறது. குறிப்பாக நிகழாண்டு பட்ஜெட்டில் 18 சதவீதம் வரை நிதியை குறைத்துள்ளது. இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. மோடி அரசானது, அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்து அவர் களுக்கு சேவகம் செய்கிறது. ஆனால், ஏழை எளிய மக்களின் 100 நாள் வேலை யை பறிக்கிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை காத்திட உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இதில், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர்.