உதகை, பிப்.26- அஞ்சல்துறையில் இனி இன்டர்நெட், மொபைல் பேங் கிங் மற்றும் ஏடிஎம் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய லாம் என நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பி.இராகவேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீலகிரியில் இன்டர்நெட், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய இயலும். மேலும் வங்கி கணக் கில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு இணையவழி மூலம் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப் புற பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயனடையலாம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அருகில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவங்கி எளிய முறையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயனடையலாம். இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.