சிவகங்கை, ஜூன் 10- சிவகங்கை மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்” அவர்களின் பிறந்த நாள் அரசு விழா வில், அன்னாரது திருவு ருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார் கள். சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்” பிறந்த நாள் அரசு விழா சிவ கங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத் தலைமையில் ஜூன் 10 அன்று நடைபெற்றது. சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி ரவிக்குமார், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். அரசின் சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்கு வேலி அம்பலத்தை போற்றி டும் வகையில், அவர்களின் வாரிசுதாரர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அனைவரது பெரும் முயற்சியாலும், வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளான இன்று அரசு விழா கொண்டாடிட அரசால் உத்தரவிடப்பட்டு, இந் தாண்டு முதல் ஜூன் 10-ஆம் தேதியன்று ஒவ்வொரு வரு டமும் அரசு விழா கொண்டா டப்படவுள்ளது என்று தெரி வித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசுகையில், அன்றைக்கு டாக்டர்.கலைஞர் விதைத்த விதை யின் பயனாக, தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டா டிட உத்தரவிட்டுள்ளார். இதற் கான பெரும் முயற்சியில், பலரின் பங்களிப்புடன் இணைந்து, நானும் பங்கு பெற்று, அதன் முழுப்பய னையும் இன்றையதினம் அடைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இதற் கான சிறப்பான நடவ டிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக் கும் செய்தித்துறை அமைச் சர்க்கும் சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றி யினை தெரிவித்துக் கொள்கி றேன் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், சிவ கங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் தென்னவன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் உள்ளாட்சி அமைப் புப் பிரதிநிதிகள், வழக்கறி ஞர் சிவ.கலைமணி அம்ப லம், வாரிசுதாரர்கள் கே. செல்வராஜ், கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.