மதுரை, மே 7- மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம் மாண்டமான ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தில் கட்டுமானப்பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகி யோர் மே 7 அன்று ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கை யில், தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தென் தமிழக பகுதிகளிலே தமி ழர்களின் பாரம்பரியமான, பண்பாட்டு அடையாளமாக திகழ்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக உலக தரத்தில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித் தார்கள். அதன்படி அலங்கா நல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏறத்தாழ 16 ஏக் கர் பரப்பளவில் ஜல்லிக் கட்டு அரங்கம் அமைய இருக்கிறது. வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரார்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என சிறப் பான முறையில் அரங்கம் அமைய இருக்கிறது.
குறிப் பாக நுழைவாயில் வளைவு, காளைகள் சிற்பக்கூடம், உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற் றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை அமைய இருக்கிறது. இப்பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வரங்கப் பணிகள் தென் னக மக்கள் பாராட்டுகின்ற அளவிற்கு சிறப்பான முறை யில் அமையும். சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு திட்டமதிப் பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல மைச்சரின் அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங் கும். அதேபோல தனிச்சியம் அலங்காநல்லூர் சாலை யிலிருந்து ஜல்லிக்கட்டு அரங்கு சாலையை இணைக்க சுமார் 3.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.22 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனு மதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ. வெங்கடேசன் (சோழவந் தான்) மற்றும் முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, தலைமைப் பொறியாளர் (மதுரை மண்டலம்) எஸ். ரகுநாதன், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.