இராமநாதபுரம், மார்ச் 18- இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சிறு வன் முதல்வரிடம் வீடியோ மூலம் வேண்டு கோள் விடுத்தான். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் சார்பில் உடனடியாக நிதி யுதவி வழங்கப்பட்டு சிகிச்சைக்காக சிறு வன் ராமநாதபுரம் அழைத்துச் செல்லப் பட்டார். பின்னர் அமைச்சர் ராஜ கண்ணப் பன் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கலந்து பேசி சென்னையில் உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்- சரண்யா ஆகியோரது நான்கு வயது மகன் கஜன். இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் பிரச்ச னையால் ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்து வர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதுகுறித்து முதுகுளத்தூர் தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை- கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சரு மான ஆர.எஸ். ராஜகண்ணப்பனின் கவ னத்திற்கு தெரிய வந்தது, இதையடுத்து அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து சன்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பா ஆத்திமுத்து மற் றும் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் நிதி யுதவியை சிறுவனின் பெற்றோரிடம் வழங்கினர்.