சிவகங்கை, ஜன.17- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிரா வயல் கிராமத்தில் ஜனவரி 17 செவ்வாயன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் மஞ்சு விரட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் களமி றக்கப்பட்டன. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேலு, சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, முன் னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.,சுப்பராம், ஜல்லிக் கட்டு பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். மாடுகளை பிடித்த வீரர் களுக்கும், பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக் கும் பரிசுகள் வழங்கப்பட் டன. அமைச்சர்கள் உதய நிதி ஸ்டாலின் , பெரியகருப் பன் மற்றும் கார்த்தி சிதம் பரம் எம்.பி.யின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருவர் பலி 10 காளைகள் நிராகரிக் கப்பட்டன. 131 பேர் காயம டைந்தனர். மாடு முட்டியதில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா புதுசுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமி நாதன் என்பவர் இறந்தார்.