சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மானாகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் ஜூன் 16 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசி ரவிக் குமார் (மானாமதுரை) ஆகியோர் முன் னிலை வகித்தார். இதில் அமைச்சர் பேசுகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் விளையாடுப் போட்டிகளில் பங்கு பெறுவ தால், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், புத்துணர்ச்சியுடனும் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட விளை யாட்டு முக்கிய பங்காற்றுகிறது.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடை பெறும் போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்று, உலக அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கு பெறு வதற்கான வாய்ப்பினை பெற்று, தமிழகத் திற்கு பெருமை சேர்த்திட வேண்டும். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு கட்டணமில்லா மேற்படிப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகின்ற விளை யாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வாய்ப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பு களில் முன்னுரிமை போன்ற சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, மாணாக்கர்கள் கருத்தில் கொண்டு, படிப்பில் மட்டுமன்றி, விளை யாட்டிலும் சிறந்து விளங்கி, தங்களது உடல் மற்றும் மனம் ஆகியவைகளை சீராக வைத்துக் கொண்டு, தங்களது வாழ்க்கை யில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோ கன், மாவட்ட விளையாட்டு -இளைஞர் நலன் அலுவலர் சி.ரமேஷ்கண்ணன், மான கிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவர் சுப. குமரேசன், பள்ளி துணைத்தலைவர் கே. அருண்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அ.சரஸ்வதி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ம.நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சு மணன், தளக்காவூர் ஊராட்சி மன்றத்தலை வர் தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பி னர் அ.ஆரோக்கியசாமி மற்றும் விளை யாட்டு வீரர்கள், வீராங்கணையர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.