சிவகங்கை, ஜூன் 13- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலை வர் ஆஷா அஜீத் தலைமையில் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.38.24 இலட்சம் மதிப் பீட்டிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ள பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மஞ்சுளா பால சந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத்துரை (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்றத் துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், மாவட்;ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தா ராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மாநில நலவாரியம் உறுப்பி னர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.