சிவகங்கை,டிச.16- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலை மையில் நடைபெற்றது. மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் லதா அண்ணா துரை, ஒன்றியக்குழு உறுப்பி னர் அண்ணாதுரை, மானா மதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன்,திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர்மன்ற உறுப்பினர் சதீஸ்குமார், சிறுகுடி ஊராட்சித் தலை வர் பஞ்சவர்ணம், சின்னக் கண்ணணூர் ஊராட்சி மன்றத் தலைவர் அங்குச் சாமி, இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன், அலுவலக மேலாளர் தவமணி, திருப்புவனம் விழாவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா,துணைத் தலைவர் மூர்த்தி, ஆணை யாளர் அங்கையர் கண்ணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவா தம் நடத்தக்கூட ஒன்றிய பாஜக அரசு அனுமதிக்க வில்லை. தமிழக முழு வதும் 6500 ரேசன் கடை பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட உள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அரசுக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்பது கொள் கை முடிவு. அதனை தமிழக முதல்வர் செயல்படுத்து வார் என்று தெரிவித்தார்.