districts

img

இருக்கன்குடி கோவில் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

சாத்தூர், அக்.30- சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை அற நிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அக்டோபர் 30 ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது: 2021- 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை யின்போது “திருக்கோவிலுக்குப் பெருமள வில் வருகைதரும் பக்தர்களுக்கான முழு மையான அடிப்படை வசதிகளை உறுதிப்  படுத்த 40 முதுநிலைத் திருக்கோயில்களுக் கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் வகுக்  கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறி விக்கப்பட்டது. அதன்படி, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக  25 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, இங்கு 3 இடங்களில் நுழைவாயில்  களை ஏற்படுத்த இருக்கின்றோம். முக்கிய பாதையில் இருந்து திருக்கோவிலுக்கு வரு கின்ற பாதையை 600 மீட்டர் அளவிற்கு புதி தாக அமைக்க உள்ளோம். வரும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்  பட உள்ளது.

98 விருந்து மண்டபங்கள்,  ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடன் செலுத்த வருகின்றவர்களுக்கு சுகா தாரமான முறையில் இரண்டு ஸ்லேட்டர்கள் அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கல் இடும்  வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்  கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறை களும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்பட உள்ளன.  இந்த திருக்கோவிலில் வியாபாரி களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் வருகின்ற பக்தர்களுக்கு அதிக விலை யின்றி பொருட்களை விற்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது உற்சவர் மண்டபம் ரூ.40  லட்சத்திலும், முடிகாணிக்கை செலுத்து கின்ற மண்டபம் ரூ. 2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது , மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், மதுரை  மண்டல இணை ஆணையர் கே.செல்ல துரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், திருக்  கோயில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி,  செயல் அலுவலர் ஆர். கருணாகரன் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனி ருந்தனர்.