districts

img

50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் அனுமந்த ராயன்கோட்டை ஊராட்சிக்கு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க குடிதண்ணீர்

சின்னாளபட்டி, மார்ச் 8-  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் அனுமந்த ராயன்கோட்டை ஊராட்சி மக்கள்  ஆத்தூரிலிருந்து வரும் காமராஜர்  குடிதண்ணீரை பிடிக்க அருகில் உள்ள பித்தளைப்பட்டி ஊராட் சிக்கு சென்றுவருவது வழக்கம். இதற்காக இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று  இருசக்கர வாகனம் மூலம் குடி தண்ணீரை கொண்டுவந்தனர். இந்நிலையில் ஊரக வளர்ச்சித்  துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யிடம் தங்கள் கிராமத்திற்கு ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க குடி தண்ணீர் வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இத னையடுத்து திண்டுக்கல் - செம் பட்டி சாலையிலிருந்து தனியாக குடிதண்ணீர் குழாய் பதிக்கப்பட்டு அனுமந்த ராயன்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டது. 1லட்சம் மீட்டர் கொள்ளளவு உள்ள தரைதள தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அங்கி ருந்து மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு பொதுமக்க ளுக்கு விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதைத்தொடர்ந்து ரூ.45 லட்சம் மதிப்பில் குடிதண்ணீர் திட்ட  பணிகள் நிறைவடைந்து அதன்  துவக்க விழா அனுமந்த ராயன் கோட்டையில் நடைபெற்றது. விழா விற்கு மாவட்ட ஆட்சியர் முனை வர் ச.விசாகன் தலைமை தாங்கி னார்.

ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஊராட்சிமன்ற தலை வர் நிர்மலா இன்பராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகை யில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் தொகுதிக்கு மட்டும் இரண்டு அரசு கல்லூரியை கொடுத்தார். தற்போது மலை கிரா மங்களில் ஆரம்ப சுகாதார நிலை யம் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் பன்றி மலையில் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது. இதன் மூலம்  மலைகிராம மக்களுக்கு 100சத வீதம் மருத்துவ வசதி கிடைக்கும். குடகனாறை பொறுத்தவரை காம ராஜர் நீர் தேக்கத்திற்கு வரும் தண்ணீர் ஆத்தூரில் உள்ள கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கன்மாய், நரசிங்கபுரம் தாமரை குளம், அதன்பின் நிலக்கோட்டை குளத்திற்கு செல்லும் .வேறு எந்த  நீர் நிலைகளுக்கோ, குளங்க ளுக்கோ குடகனாற்று தண்ணீர் செல்லாது. அதன்பின்னர் சீவல்  சரகு வழியாக வீரக்கல், வக்கம்  பட்டி, அனுமந்த ராயன்கோட்டை யை வந்தடையும். கடந்த அதிமுக  ஆட்சியின் போது குடகனாற்று பகு தியில் நடந்த தவறுகள் திருத்தி அமைக்கப்பட்டு முறையான குட கனாற்று தண்ணீர் இப்பகுதிக்கு (ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்) வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.