districts

img

தேனியில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி -டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி

தேனி ,ஜூலை.7- கோவையில் துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை டிஐஜி விஜயகுமார் உடலு க்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர் . கோவை சரக டி.ஐ.ஜி.  விஜயகுமார் (45), வெள்ளிக் கிழமை  காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கி யை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற் கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறை யினர்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவி யும், ஒரு மகளும் உள்ள னர். கோவை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜய குமாரின் உடல் தேனி ரத்தி னம் நகரில் வசிக்கும் அவ ரது பெற்றோர்

இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் -டிஜிபி  அஞ்சலி   தமிழக அரசின் சார்பில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இறுதி மரியாதை செலுத்தி னார். கோவை மேற்கு, மதுரை தென்மண்டல ஐஜி.க்கள் சுதாகர், அஸ்ராகார்க், டிஐஜிக்கள்  அபிநவ்குமார், சரவணசுந்தர், துரை, பொன்னி, எஸ்பி.க்கள் பாஸ் கரன், பிரவீன் உமேஷ்டோங் கரோ, பத்திரி நாராயணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  உட்பட ஏராளமான காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர். உறவினர்கள் இறுதிமரி யாதை செலுத்திய நிலை யில் டிஐஜி.விஜயகுமார் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. ரத்தினம் நகரில் இருந்து கிளம்பிய ஊர்வலம் பொம்மைய கவுண்டன் பட்டி, அல்லிநகரம், பெரிய குளம், கம்பம் சாலை வழியே தேனி நகராட்சி பொது மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு முழு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

டி.ஐ.ஜி.விஜயகுமார் தனது பள்ளிப் படிப்பை தேனி நாடார் சரசுவதி மேல் நிலைப்பள்ளியில் முடித்துள்ளார்.அர சின் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறிய வயதிலேயே இவரிடம் இருந்துள்ளது.ஆகவே குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்தார். ஆனாலும் உயர் பதவிக்கு செல்லும் நோக் கில் 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் பணிக்கு தேர்வானார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்கா ணிப்பாளராக பணியாற்றி உள்ளார். பின் சிபிசிஐடி எஸ்பி-யாக தனது பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில்  இவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.   இதை யடுத்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 6-ம் தேதி மாதம் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி-யாக பணியாற்றி வந்தார்.