திண்டுக்கல், மார்ச் 27- திண்டுக்கல் ஆரோக் கிய மாதா தெருவில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று கலை மாலை நிகழ்ச்சி நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு மாநகரத் தலைவர் அ.வைத்தியலிங்க பூபதி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் நா. தாமோரன் வரவேற்று பேசி னார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திரைக்கலைஞர் ரோகிணி, மேயர் இளமதி ஜோதிபிர காஷ், துணை மேயர் எஸ். ராஜப்பா, சங்கத்தின் மாநி லத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், மாநில பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கணேசன், எஸ்.ஜோதிபாசு, மாரியம்மாள், சங்கத்தின் மாவட்டத் தலை வர் வரத.ராஜமாணிக்கம், மாவட்டச் செயலாளர் கவி வாணன், மாநிலக்குழு உறுப் பினர் ராஜேந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். புதுகை பூபாளம் கலைக்குழு, சக்தி தப்பாட்ட கலைக்குழு, அப்துல்காதர் கோபால் நாடக்குழு மற்றும் டான், வனசேகரன் குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பாடகர் பழனி, நந் தினி, விஷ்ணுபிரியா ஆகி யோரின் பாடல்கள், கவி ஞர்கள் முராநி, துர்காதேவி, அர்ஜுன்,ஆகியோரது கவிச்சரம் நடைபெற்றது. கவிஞர் ரேவதி முகில், ஓவியர் தமிழ்பித்தன், கவி ஞர் சுசீலாமேரி, அமா னுல்லா, ஓவியர் ஆதவன், தூரிகை தங்கவேல், கவிஞர் செல்மா, சேட்டால்பாரதி, ராஜாமணி, பெரியசாமி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்தனர். (ந.நி.)