districts

சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு சேவைக்காக கையூட்டு கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

மதுரை, ஜூன் 18- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 17 அன்று தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி  தலைமையில் மதுரை மண்டல சார்பதிவாளர்கள் சீராய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்  பி.மூர்த்தி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் முந்தைய தினம் ஆன்  லைனில் பதிவு செய்து கொண்டு பெற்றுக்  கொள்ளும் டோக்கனில் குறிப்பிடப்பட்டி ருக்கும் நேரத்தில் வருகைதந்து, கால விர யமின்றி சுமார் 15 நிமிடத்திற்குள்ளாகவே பதிவு பணியை முடித்துக் கொண்டு செல்  லும் வகையில் பதிவு தொடர்பான அனைத்து பணிகளும் கணினி வழியே மிக வேகமாக நடைபெறுகின்றன. பதிவு  தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளும் கணினி வழியாகவே செலுத்தப்படுகின்றன. நூறு ரூபாய் செலுத்த வேண்டி இருந்தாலும் அதனை ஏடிஎம் கார்டு மூலமாக ஸ்வைப் செய்து செலுத்தும் வகையில் அனைத்து சார்பதி வாளர் அலுவலகங்களிலும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்  டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டி உள்ளதால் அவர்கள் பதிவுக்காக சார் பதிவாளர் அலு வலகம் வரும்போது கையில் பணம் கொண்டு வரத் தேவையில்லை. சார் பதி வாளர் அலுவலகத்தில் நேரடி பணப்பரி வர்த்தனை எதுவும் நடைபெறுவதில்லை. நடைபெற தேவையும் இல்லை. எனவே  பதிவுக்கு வரும் பொதுமக்கள் சார்பதிவா ளர் அலுவலகத்திற்கு பணம் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படு கிறது.  

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொழுது அங்கு அவர்கள்  பெறும் சேவைக்காக யாராவது கையூட்டு  கேட்டால் இது குறித்த புகார்களை பதிவுத்  துறை தலைவருக்கு அல்லது பதி வுத்துறை செயலாளருக்கு அனுப்பலாம். இதற்கென தொடர்பு எண்கள் சார்பதிவா ளர் அலுவலகங்களில் அனைவர் பார்வை யில் படும்படி எழுதி வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் நலனைக் கருதி பதி வுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் திட்டம் விரைவில் செயல்  படுத்தப்பட உள்ளது, தற்போது எதிர்  கொள்ளப்படும் சிறு சிறு காலதாம தங்கள் கூட இனிவரும் காலங்களில் நடை பெறாமல் இருக்க ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்படும். பொதுமக்கள் வழிகாட்டி மதிப்பின்படியான அடிப்படையில் தங்க ளது சொத்துக்களின் மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி ஆவ ணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.சௌ.சங்கீதா, துணை பதிவுத்துறை தலைவர் இரவீந்திர நாத், உதவி பதிவுத்துறை தலைவர்  ராஜ்குமார் மற்றும் மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் பெரியகுளம் சரக சார்பதி வாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.