தேனி ,ஜூலை .22- தேனி மாவட்டத்தில் மீன்வளப்பணி கள் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் கட்டுமானப்பணிகளை மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். மஞ்சளாறு அணை மீன்பண்ணையில் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரபணு திலேப்பியா (கிப்ட் திலேப்பியா) மீன்குஞ்சு பொரிப்பக பண்ணை , வைகை அணையில் 2 இலட்சம் விரலி மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார் . அதனைத்தொடர்நது, தேவதானப் பட்டியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில், மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, பேராசிரியர்கள், அலுவ லர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீரபாண்டியில் ரூ.82.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் ,ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் கல்லூரியின் கால்நடை பண்ணை வளாகத்தில் மாட்டுக் கொட்டகை, ஆட்டு கொட்டகை, பன்றி கொட்டகை, கோழி கொட்டகை மற்றும் பசுந்தீவன கொட்டகை அமைக்கப்பட வுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இடத்தினை தேர்வு செய்தார். அமைச்சருடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் க.வீ,முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்),ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி),கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், எல்.மூக்கையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பிரவிண் உமேஷ் டோங்கரே,உட்பட மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.