districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மேம்பாட்டு நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மேம்பாட்டு நிதியில் மன்னர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அலிஸ் மில்லர் பெண்கள் தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடத்திற்கு ரூ.35 லட்சம் நிதி வழங்கினார். காளையார்கோவிலில் மன்னர்கல்வி நிறுவனங்களின் செயலர் வி.எஸ். குமரகுரு, டி.கே.ரங்கராஜனை நேரில் நன்றி தெரிவித்தார். “சீர்மிகு சிவகங்கைச் சீமை” புத்தகத்தை வழங்கினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர.கே.தண்டியப்பன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துராமலிங்க பூபதி, காளையார்கோயில் ஒன்றிய செயலாளர் தென்னரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கருப்புச்சாமி, மாவட்ட க்குழு உறுப்பினர் மெய்யப்பன்,எம்.கந்தசாமி, தனசேகரன், திருமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.