districts

img

மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் மையம்: மேயர் தொடங்கி வைத்தார்

மதுரை, நவ.2- மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப  சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் சமூக  பொறுப்பு நிதியின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் சேக ரிக்கும் மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.  நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு. வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வ ரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு.ராம்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி, பாமாமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.