மதுரை மாநகராட்சி பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் பரவும் அபாயம் இருப்பதனை தொடர்ந்து அதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் தலைமையில் பொன்னகரம் பிரட்வே மணல்மேடு மருத்துவமனை அருகில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை ஆணையாளர் மரு. வினோத் குமார், இணை ஆணையாளர் மரு, ஸ்ரீ கோதை, மற்றும் மரு. சாந்தி மருத்துவர்கள், சுகாதார அலுவலர், துப்புரவு ஆய்வாளர், மருத்துவகுழுவினர் கலந்துகொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.