விருதுநகர், மே 25- இராஜபாளையம் அருகே சத்தி ரப்பட்டியில் நூல் விலை உயர்வை கண்டித்து மருத்துவ துணி உற்பத்தி யாளர்கள் மே 25 புதன்கிழமையன்று முதல் ஒரு வார காலத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. மேலும், மருத்துவ துணி (பேண்டேஜ் )ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களும் உள் ளன. இந்த விசைத்தறித் தொழிலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, வரலாறு காணாத அள விற்கு நூல் விலை உயர்ந்துள்ளது. எனவே, நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி புதன் முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்து, தற்போது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால், நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மருத்துவ துணி கள் தேங்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே, ஒன்றிய அரசு, நூல் விலை யை கட்டுக்குள் கொண்டுவர நடவ டிக்கை எடுக்க வேண்டும். பதுக்கி வைக் கப்பட்டுள்ள நூல்களை வெளி மார்க் கெட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சுகள் வெளியே வந்தாலே நூல் விலை குறைந்துவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.