திண்டுக்கல், அக்.30- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் மக்களுக் கான மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்திய கம்யூனிச இயக் கத்தின் 103வது ஆண்டு மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 59வது உதய தினம் கொண்டாடும் விதமாக ஞாயி றன்று கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலக மான தோழர் ஏ.பாலசுப்ர மணியம் நினைவகத்தில் மருத் துவ முகாம் நடைபெற்றது. இந்த இந்நிகழ்ச்சியில் ஆயர்வேத சிறப்பு மருத்து வர்கள் தங்கம் பொன்னுச் சாமி, ஷேக்பரீத், சித்தா மருத் துவர் மகேந்திரன், ஹோமி யோபதி மருத்துவர்கள் சாரு வாகன், துரைமுருகன் ஆகி யோர் முகாமில் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை சத்து, மூட்டுவலி, முதுகு தண்டுவட நோய்கள் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை கள் இலவசமாக வழங்கப் பட்டன. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. ராணி, திண்டுக்கல் ஒன்றி யச்செயலாளர் ஆர்.சரத் குமார், கொடைக்கானல் ஒன் றியச்செயலாளர் ஜோசப், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.வனஜா, சி.பி.போஸ், முகேஷ், அழகர்ராஜா, உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.