இராஜபாளையம், டிச.24- இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளியன்று முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் இரகுராமன், இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு, மருத்துவ அலுவலர் பால சுப்ரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், சரவணமுருகன், லட்சுமணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் பள்ளி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.