districts

img

ஜனநாயகத்தைக் காக்கும் நம்பிக்கையாக முற்போக்கு படைப்பாளிகள் இருக்கிறார்கள்

திருப்பூர், டிச. 19 - ஒற்றைப் பண்பாடு என்று சொல்லி இந்துத்துவா சக்திகள் ஜன நாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக் கும் இன்றைய காலச் சூழலில், ஜன நாயகத்தைக் காக்கும் நம்பிக்கை யாக முற்போக்குப் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்று திருப்பூர் மாந கராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கூறி னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப் பூர் வடக்கு கிளை சார்பில் வேலம்பா ளையம் அருகே பி.டி.ஆர்.நகரில்  இலக்கிய சபை கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் பங்கேற்று திருப் பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் வாழ்த்தி பேசுகையில், தமு எகச அமைப்பு பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, தமிழ் ஒளி, பாலச ரஸ்வதி ஆகிய ஐம்பெரும் ஆளுமை களை அடையாளமாகக் கொண்டு  செயல்படுகிறது. இன்று எல்லாவற் றிலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே  பண்பாடு என்று இந்துத்துவா சக்தி கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக திகழ்கின்றன. இந்த நிலை யில் ஜனநாயகத்தைக் காக்கும் நம் பிக்கையை இந்த முற்போக்கு படைப்பாளிகள் தருகிறார்கள்.

அவர் களோடு சேர்ந்து பயணிப்பேன், என்று கூறினார். முன்னதாக, தமுஎகச திருப்பூர் வடக்கு கிளை மாவட்டத் தலைவர்  த.நாகராஜன் தலைமை வகித்தார்.  அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப் போர் நலச் சங்க நிர்வாகிகள், ஹோமியோ டாக்டர் திருவேங்கடம், ஆனந்தகுமார், சுந்தர்ராஜன் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் பா.ராஜேஷ் வரவேற்றார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ஆர்.கணேசன்  நோக்க உரை ஆற்றி னார்.  இதைத் தொடர்ந்து “நானறிந்த திருப்பூர்” என்ற தலைப்பில் ஆர்.பி. எஸ். ஸ்டுடியோ உரிமையாளர் ஆர். பழனிச்சாமி,  “சிந்துவெளிப் பண்பாட் டின் திராவிட அடித்தளம்” என்ற புத்த கத்தை அறிமுகம் செய்து யோகி செந் தில் ஆகியோர் உரையாற்றினர்.  இக்கூட்டத்தில் பங்கேற்ற முதலா வது மண்டலத் தலைவர் உமா  மகேஸ்வரி, மேயர் ந.தினேஷ்குமா ருடன் இணைந்து, மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று  முதல்வர் ஸ்டாலினிடம் பரிசு பெற்ற  மாணவி சௌமியா, 66 முறை ரத்த  தானம் செய்துள்ள வாலிபர் சங்கத் தைச் சேர்ந்த கே.தமிழ்ச்செல்வன், கார்த்திக் விஸ்வநாதன் ஆகியோரை  பாராட்டி, கௌரவித்தனர். இயக்குநர் செல்வன் திருமூர்த்தி  இயக்கிய “மிருகம் கொன்று” என்ற   குறும்படத்தை மேயர் ந.தினேஷ்கு மார் வெளியிட்டு அக்குழுவினரைப் பாராட்டியதுடன், அங்கேயே அமர்ந்து அக்குறும்படத்தையும் முழுவதுமாக பார்த்து ரசித்தார்.  இவ்விழாவில் முன்னதாக மாண வன் வெ.பார்த்திபன் மிருதங்கம் வாசிக்க, மாணவிகள் பரதநாட்டியம்  ஆடினர். கலை இலக்கிய ஆர்வலர் கள், பெண்கள் உள்பட பொது மக்கள்  ஏறத்தாழ 200 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச் சியை ஆசிரியர் மணிகண்டபிரபு, பொன்.பாலகுமாரன் தொகுத்து வழங்கினர். இலக்கிய சபையின்  நிறைவாக, ஆசிரியர் பா.ஜெயலட் சுமி நன்றி கூறினார்.