districts

img

குடிநீர் குழாய் இணைப்புப்பணி முடிந்த பிறகு சாலை சீரமைக்கப்படும்

மதுரை, மே 18-  மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதம் புதனன்று மதுரை மாநக ராட்சி மேயர் வ.இந்திராணி தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணை யாளர் க.பா.கார்த்திகேயன், துணைமேயர் தி.நாகராஜன் உள்ளிட்டு மண்டலத் தலை வர்கள், மாமன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் திட்ட பணி குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த மே 11ஆம் தேதி மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் வா. இந்திராணி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி புதனன்று பட்ஜெட்டு விவாதம் நடைபெற்றது. மதுரை  மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள், மண்டலங்களில் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர், தெரூ விளக்கு பிரச்சனை மற்றும் கழிப்  பிட வசதி, பொது சுகாதார மேம்பாடு, பள்ளி கள் சீரமைத்தல், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து பேசினர்.  இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் மேயர் வ. இந்திராணி ஆகியோர் பேசுகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்  இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

மறு சீரமைப்புக்கு பின் சில பகுதிகள் விடு பட்டுள்ளது. அவற்றில் குடிநீர் இணைப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை பணி என்பது தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. விரிவாக்க பகுதிகளி லும் இணைப்புகள் கொடுப்பதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது அந்த அடிப்ப டையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுற்ற பின் சாலைகள் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்படும். மேலும் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு நடைபெற்று வருகிறது. அனுப்பானடி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டி டம் சேதமடைந்துள்ள நிலையில் அதை புதி தாக கட்டுவதற்கு ரூ. 91.92 லட்சத்திற்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ மதிப்பீடு தயார் செய்து  கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது அங்கு பள்ளி யில் ஸ்மார்ட் வகுப்பு மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை  எடுக்கப்படும். பகுதியில் உள்ள சுகாதார பிரிவு  அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான தகவல்களை கூறினால் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவார்கள் என்று பதில் அளித்தனர்.

மதுரை மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த சோலைராஜா பேசுகை யில், மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரியார் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில்  எப்போது இப்பணிகள் முழுமையாக முடி யும் ஏன் இந்த தாமதம் என்று கேள்வி எழுப்பி னார்.  மாநகராட்சி ஆணையாளர் பதிலளிக்கை யில், பணிகள் தற்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது கொரோனா ஊரடங்கு கார ணமாக பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது மேலும் குழாய்கள் பதிக்கும் பகுதி யில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. எனவே மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நகராட்சி பகுதிகளில் கிராமங்கள் வழியாக  குழாய் பதிக்கும் பணி மற்றும் மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மக்  கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். ஸ்மார்ட் சிட்டி பணியில் வைகை ஆற்றில்  இரண்டு கரை பகுதிகளிலும் பூங்காக்கள் அமைப்பது மற்றும் சைக்கிளில் செல்வது நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற திட்டங்  கள் இருந்தது. ஆனால் அவைகள் செயல் படுத்தப்படாமல் பணிகள் நடைபெற்று வரு கிறது மேலும் தற்போது இரண்டு பகுதியி லும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது இவற்றை ஒழுங்குப்படுத்தி திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

தெரு விளக்குகள் சரிசெய்யப்படும்

இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர், தெருவிளக்குகள் 2 ஒப்பந்தங்  கள் மூலம் போடுவதற்கு அனுமதி அளிக்கப்  பட்டது. ஒன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மற்றொன்று ஐவிடிஎம் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது 2017 - 18 ஆம் ஆண்டில் ஐவிடிஎம் நிறுவனம் தெருவிளக்குகள் பராமரிப்பது மாற்றுவது  போன்ற ஒப்பந்த புள்ளியில் உள்ளார்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்  தொகை என்பது உள்ளதால் தற்போது ஒப்பந்தத்தை மாற்ற முடியாது. எனவே தெரு விளக்குகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் படும் என்று கூறினார்.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடுக: சிபிஎம் கவுன்சிலர்

56வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் பேசுகையில், 56வது வார்டுக்கு உட்  பட்ட வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத தால் திறந்தவெளியில் அமர்ந்து குழந்தை கள் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் அருகில் உள்ள தெருக்களில் இருப்பவர்கள் சுவர் ஏறி பள்ளிக்குள் வந்துவிடுகின்றனர் இது போன்ற செயல் பளை தடுக்க சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகக் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது அவற்றை சீரமைத்து மாணவர்கள் பயிற்சி  பெறும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சேதுபதி பாண்டித் துரைத்தேவர் பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 150 மாண வர்கள் தான் படித்து வருகிறார்கள். எனவே பள்ளிகளை தரம் உயர்த்தி இருபாலர் படிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும். அதே போல் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் என்பது  இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது ஆசிரியர் பற்றாக்குறையினையும் போக்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்று பேசி னார். 71-வது வார்டு விசிக மாமன்ற உறுப்பி னர் முனியாண்டி பேசுகையில் கடந்த மாதம் பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் 3 தொழி லாளர்கள் கழிவு நீரேற்று நிலைய பராம ரிப்பின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த னர். அவர்களுடைய குடும்பத்திற்கு போதிய நிதி மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே  அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை யினை அரசு வழங்கிட வேண்டும் அதை மாநக ராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நக ரின் போக்குவரத்து நெரிசலை போக்கிட தற்  போது ஊர்மெச்சி குளம் முதல் தல்லா குளம் வரை அமைக்கப்படும் மேம்பால பணி யை கோரிப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். நெல்பேட்டை பகுதியிலும் மேம் பாலம் கட்டும் பணியினை செயல்படுத்திட நட வடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்  தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நுழைவுவாயில் என்பது பொதுமக்கள் பார்வையின்றி உள்ளது. எனவே தோரண வாயிலை மேம்படுத்தி. அதில் தந்தை பெரியார் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பேசினார். அவர் கேள்விக்கு பதிலளித்த மாநக ராட்சி ஆணையாளர், பாலம் கட்டுமான பணி களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள் ளது அது முடிந்தவுடன் அதற்கான பணி கள் துவங்கி விடும் அதேபோல் பெரியார் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் அவர்கள் படம் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அது விரைவில் வைக் கப்படும் என்று கூறினார்.

விவாதத்திற்கு போதிய நேரம் ஒதுக்க கோரிக்கை

காலை 10.30 மணிக்கு துவங்கிய மாநக ராட்சி கூட்டம் மதியம் 1 மணிவரை நடைபெற்  றது. இதில் பல மாமன்ற உறுப்பினர்கள் பேசு வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்வதற்கு முன் கூட்டியே கடிதம் கொடுத்தும் அவர்களுக்கு போதிய நேரம்ஒதுக்கப்படவில்லை. திமுக, கங்கிரஸ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதி கோரிக்கைகளை முன் வைப்பதற்கு நேரம் ஒதுக்கிட வேண்டும். மக்களின் நேரடி தொடர்  பில் இருப்பவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனையை பேசு வதற்கு மாமன்றத்தில் நேரம் ஒதுக்கவில்லை என்றால் இது மாமன்ற அவையின் வரம்பு மீறிய செயலாக உள்ளது. எனவே வரும்  காலத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசு வதற்கு உரிய நேரம் ஒதுக்க வேண்டும். அதே போல் பேசக்கூடிய கட்சிகளை மாநகராட்சி  நிர்வாகமும் மேயரும் முடிவு செய்யக்கூடாது.  அதை அந்தக் கட்சியின் மாமன்ற குழு தலை வர்கள் தான் முடிவு செய்திட வேண்டும் என்று கூறினர். கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாமன்ற  குழு தலைவர் சோலை ராஜா, கடந்த கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிக்கு என்று தனியாக  இடம் ஒதுக்கப்படவில்லை. இந்த முறை கடைசி வரிசையில் இடம் ஒதுக்கி உள்ளார்கள்  பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பேசுவோம். அதேபோல் மாமன்றத் தில் எதிர்க்கட்சிக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.