districts

தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்ற இடதுசாரிகளின் மே தின பேரணி

நாகர்கோவில், மே 1- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இடதுசாரி தொழிற்சங்கங்ளின் மே தின பேரணிக்கு காவல்துறை தடை விதித்தை தொடர்ந்து தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறவிருந்த இடதுசாரி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி மற்றும் ஜெசிடியு ஆகிய அமைப்புகளின் மே தின சிறப்பு பேரணி தயார் நிலையில் இருந்த நிலையில் மாவட்ட காவல்துறை யினர் பேரணியை தடுக்கும் வகையில் பல தடைகளை விதித்  தனர்  இதைத் தொடர்ந்து பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்றது. பேச்சு வார்த்தை தோல்வியடையும் நிலை ஏற் பட்ட நிலையில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் எழுச்சியுடன் தடையை மீறி பேரணியை நாகர்கோவில் பிரதான சாலை யில் நடத்தின.