திண்டுக்கல், ஜுன் 4- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் நகர் 12 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கள் கே.பாலபாரதி, என்.அமிர்தம், மாவட்டச் செய லாளர் ஜி.ராணி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வனஜா, உள்ளிட்டோர் பேசி னர். மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். நகரத் தலைவராக நிறை மதி, செயலாளராக எஸ். ராஜேஷ்வரி, பொருளாள ராக லதா. துணைத்தலைவர் களாக கீதா, மேரி, துணைச் செயலாளர்களாக நிவே திதா, கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் உள்ள மகளிர் பள்ளி, கல்லூரி மற் றும் கல்வி நிறுவனங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்ச னைகள் தொடர்பான புகார் களை பெற புகார் பெட்டி, வேலைவாய்ப்பகங்களில் விசாகா கமிட்டியும் விசா ரணை கமிட்டிகளும் அமைக் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.