districts

img

ஆளுநரைக் கண்டித்து மாதர் சங்கம் போராட்டம்

விருதுநகர், மார்ச்.22- ஆன்லைன் ரம்பி தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசானது, கேஸ் சிலிண்டர் விலையை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வானை தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் என்.உமாமகேஸ்வரி பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி கண்டன உரையாற்றினார். பழனி  பழனி பேருந்துநிலையம் அருகே செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கௌரி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜி.ராணி,   மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி, துணைத்தலைவர் ஆர்.வனஜா, மாவட்டக் குழு உறுப்பினர் ராக்கம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.