மதுரை, செப்.11- நகர்ப்புற பெண்களுக்கும் 100 நாள் வேலையை அதிகப்படுத்த வேண்டும், ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.400 வழங்கிட வேண் டும் என்று வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மேயரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாநக ராட்சி வளாகத்தில் திங்களன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.லதா தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் வை.ஜென்னி யம்மாள், மாநில துணைச் செய லாளர் ஆர்.சசிகலா ஆகியோர் விளக்கி பேசினர். அப்போது அவர்கள் பேசு கையில், ‘‘மதுரை மாநகராட்சியில் நகர்ப்புற பெண்களுக்கான வேலை வாய்ப்பு கடந்த காலங்க ளில் 18 நாட்கள் அமல்படுத்தப்பட் டுள்ளதாக தெரிகின்றது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருவதைப் போல் நகர்ப்புற பெண்களுக்கான வேலை வாய்ப்பு கூடுதலாக நாட்களாக அமல்படுத்த வேண்டும்’’ என்றனர். போராட்டத்தில் மாவட்டப் பொருளாளர் சாந்தி மற்றும் நிர்வாகிகள் பாண்டி, ஆர்.கல்பனா, விமலா, புவனேஸ்வரி, பழனியம்மாள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.