districts

img

ஈசனூருக்கு பேருந்து இயக்க மாதர் மாநாடு வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 18- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க சிவ கங்கை ஒன்றிய எட்டாவது மாநாடு சிவகங்கையில் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் அமுதப்பிரியா தலைமை வகித்தார். முருகவள்ளி முன்  னிலை வைத்தார். மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலா ளர் பவுன்தாய் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாற்றுத்திறனாளி சங்க மாவட்டச் செயலாளர் முத்து ராமலிங்க பூபதி வாழ்த்துரை வழங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.சசிகலா நிறைவுரையாற்றினார். அம்பிகா நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு: ஒன்றியத் தலைவராக பவுன்தாய், செயலாளராக அமுதப்பிரியா, பொருளாள ராக அழகரம்மாள், உள் ளிட்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் ஈசனூர் கிராமத்திற்கு நகர் பேருந்து இயக்க வேண்டும். திரு மாஞ்சோலையில் ரேசன் கடை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.