விருதுநகர், மார்ச் 23- விருதுநகர் வட்டாட்சியர் அலு வலகத்திற்குள் தலைவிரித்தாடும் லஞ்சம் ஊழல் தொடர்பாக அலு வலகம் முன்பு வைக்கப்பட்ட தட்டி போர்டை வட்டாட்சியர் தூண்டுத லின் பேரில் அகற்றியுள்ள சம்ப வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன் கூறியதா வது: விருதுநகர் மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு வாரிசுச் சான்றிதழ், வருமான சான் றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் பட்டா கோரி ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர், வரு வாய் ஆய்வாளர் ஆகியோர் கள ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க லாம் என பரிந்துரைக்கின்றனர். ஆனால், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் ஆகியோர் லஞ்சம் தராத காரணத்தால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி மனுவை நிராக ரித்து வருகின்றனர். இதனால், சாதா ரண ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்படைகின்றனர். மீண்டும் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலையும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏராளமான புகார்கள் வந் துள்ளன. தட்டி போர்டு மாயம் எனவே, இதனைக் கண்டித்து விருதுநகர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தட்டி போர்டு வைக்கப் பட்டது. ஆனால், வட்டாட்சியர் தூண்டுதலின் பேரில் வைக்கப் பட்ட போர்டை அகற்றியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கட்சியின் சார்பில் பொது மக்க ளைத் திரட்டி மாபெரும் போராட் டம் நடைபெறும் என்பதையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.