திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆதிக்க மனோபாவம், சிந்தையுள்ளவர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோகின் நான்காம் ஆண்டு திண்டுக்கல்லில் திங்களன்று வாலிபர் சங்கம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. அமைப்பின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிகழ்வில் மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, நகர்த் தலைவர் அஜீத்குமார், செயலாளர் பிரேம்குமார், தினேஷ், சூர்யா, மாணவர் சங்க மாவட்டத்தலைவர் முகேஷ், மாவட்டத் துணைச்செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் அசோக் பட்த்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.